செவ்வாய், 2 ஜனவரி, 2007

சமர்ப்பணம்.....

தமிழன்னைத் தெருவோரம்
இலக்கியக் கடைகளில்
புதுக்கவிதை இனிப்புத்தின்றவன்
இன்று அதே தெருவோரம்
இனிப்புச் செய்ய முயல்கின்றேன்

ஆம்...
புதுக்கவிதைக் கடலினிலே - ஓர்
துளியளவு இறைக்க நினைத்து
எழுதுகோல் தாங்கிவிட்டேன்...

பெற்றெடுத்த தமிழ்த்தாயே....!
வளர்த்துவிட்ட தாய்த்தமிழே...!
அனைத்தும் உங்களுக்கே
சமர்ப்பணம்.....

திங்கள், 1 ஜனவரி, 2007

விந்தை....

ரோசா முள் தைத்து வலி
உணர்ந்திருப்பீர்கள் - இங்கு
ரோசாவே முள்ளாகத் தைக்கும்
விந்தை பார்த்தீரோ...!