மானிட ஓடையிலே...
அன்று முதல் இன்றுவரை...
கலந்து கொண்டே நாறுகின்ற
சாக்கடையே.....!
என்றோ உய்ந்திருக்கும்
இந்தத் தமிழர் வாழ்வு....
இத்தனை இழிவுகட்கும்
மூலமே நீதானே....!
என்று வறண்டிடுவாய்....?
எங்கே நான் மனுக்கொடுக்க வேண்டும்....?
என் தமிழின மொத்தமும் அழுகி அழுகிச்
சாகின்றதே....!!!
இன்றே ஆணையிடுகின்றேன்...
என்மூச்சு நிற்பதற்குள், இல்லை
இல்லை அவகாசம் அதிகம்
இம் மை காய்வதற்குள் ஒளிந்து போ....????
புதன், 5 டிசம்பர், 2007
செவ்வாய், 4 டிசம்பர், 2007
ஓர் காலைப் பொழுதின் என் மன ஓட்டம்...!
கிழிந்த இலைகள், முறிந்த மரங்கள்,
அணில் கொறித்த பழ்ங்கள்,
காய்ந்த செடிகள், கருகிய சருகுகள்,
காலைச் சூரியன், மாலைச் சந்திரன்,
இரவின் இருட்டு, பகலின் வெம்மை,
மழையின் வெள்ளம், காற்றின் வேகம்,
இப்படித்தான் வாழ்க்கை இன்றுவரை களிந்தது...!
வாழ்க்கைப் பூங்காவில் மொட்டென அரும்பி
பூவாய் மலர்ந்து என்றும் மணம் பரப்பும் ரோஜாவே...!
உன் வருகையின் பின் களிந்த வாழ்க்கையே
ஓர் புதினமானது....!
கிழிந்த இலைகளின் ஓவியச் செறிவுகள்,
உயிர்த்து எழும்பும் முறிமரத் துளிர்கள்,
மீதிப் பழம் தின்ன மண் கொண்ட உயிர்கள்,
எருவாகி மகிழும் செடிகள், சருகுகள்
என் தனிமை களையும் சந்திர நங்கை,
கண் சிமிட்டி நகைக்கும் நட்சத்திரர்,
ஒளிர்கை கொண்டு வானவில்லின் கண்
வண்ணமெடுத்தடிக்கும் பகலோன்...!
விளையாட்டுக் கப்பலுக்காய் சிறுமழை...
ஏழையவர் வயிறு நிறைக்க பருவமழை...
புயலும் கூட உனைத் தாண்டி,
வருடி வருகையில் தென்றலாகும் விந்தை...
ஆதாமின் வெற்றியில் ஏவாளுக்கும்
பங்குண்டாம் - என் மாற்றத்தின்
மாறுதலில் உன்பங்கு ஏதடி...?
எல்லைகள் தாண்டிய உன்னிதழ் புன்னகையோ....?
அணில் கொறித்த பழ்ங்கள்,
காய்ந்த செடிகள், கருகிய சருகுகள்,
காலைச் சூரியன், மாலைச் சந்திரன்,
இரவின் இருட்டு, பகலின் வெம்மை,
மழையின் வெள்ளம், காற்றின் வேகம்,
இப்படித்தான் வாழ்க்கை இன்றுவரை களிந்தது...!
வாழ்க்கைப் பூங்காவில் மொட்டென அரும்பி
பூவாய் மலர்ந்து என்றும் மணம் பரப்பும் ரோஜாவே...!
உன் வருகையின் பின் களிந்த வாழ்க்கையே
ஓர் புதினமானது....!
கிழிந்த இலைகளின் ஓவியச் செறிவுகள்,
உயிர்த்து எழும்பும் முறிமரத் துளிர்கள்,
மீதிப் பழம் தின்ன மண் கொண்ட உயிர்கள்,
எருவாகி மகிழும் செடிகள், சருகுகள்
என் தனிமை களையும் சந்திர நங்கை,
கண் சிமிட்டி நகைக்கும் நட்சத்திரர்,
ஒளிர்கை கொண்டு வானவில்லின் கண்
வண்ணமெடுத்தடிக்கும் பகலோன்...!
விளையாட்டுக் கப்பலுக்காய் சிறுமழை...
ஏழையவர் வயிறு நிறைக்க பருவமழை...
புயலும் கூட உனைத் தாண்டி,
வருடி வருகையில் தென்றலாகும் விந்தை...
ஆதாமின் வெற்றியில் ஏவாளுக்கும்
பங்குண்டாம் - என் மாற்றத்தின்
மாறுதலில் உன்பங்கு ஏதடி...?
எல்லைகள் தாண்டிய உன்னிதழ் புன்னகையோ....?
தென்றல்....
தென்னங்கீற்றிடை தவழ்ந்து வரும்
சந்தனம் வருடிய மென்காற்றே....!
கட்டடச் சாக்கடையில் நகருகின்ற
வாழ்வினிலே.....!
போட்டிகள், பொறாமைகள், கோபங்கள்,
தாபங்கள் இன்னும் எத்தனையோ....
குழிகளில் மூழ்கி, வாழ்க்கையின்
விரக்த்தியில் நிற்கின்ற போதிலும்
நீ என்னை கடந்து செல்லுகின்ற
பொழுதுகள், என் உயிர்
குழைந்து செல்லுகின்றதே...?
எத்துனை விந்தை செய்கின்றாய்....!
சந்தனம் வருடிய மென்காற்றே....!
கட்டடச் சாக்கடையில் நகருகின்ற
வாழ்வினிலே.....!
போட்டிகள், பொறாமைகள், கோபங்கள்,
தாபங்கள் இன்னும் எத்தனையோ....
குழிகளில் மூழ்கி, வாழ்க்கையின்
விரக்த்தியில் நிற்கின்ற போதிலும்
நீ என்னை கடந்து செல்லுகின்ற
பொழுதுகள், என் உயிர்
குழைந்து செல்லுகின்றதே...?
எத்துனை விந்தை செய்கின்றாய்....!
சனி, 10 நவம்பர், 2007
நீயும் பெண்ணோ....!
இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்....
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்
செல்கிறாயே.....???
கடலலையே....!!!
நீயும் பெண்ணின் அம்சமோ...?
காத்துத்தவம் கிடந்தும்....
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்
செல்கிறாயே.....???
கடலலையே....!!!
நீயும் பெண்ணின் அம்சமோ...?
பூரிப்பு...
கட்டி அணைக்கையிலும்,,,,
கனிவுடனே சிரிக்கையிலும்….
கடுங்கோபச் சினங்கொண்டு எனை
எட்டி உதைக்கையிலும்…
உன் உதட்டழகு என்னிதயம் பற்றி
என் உள்ளம் பூரிக்குதடி…!!!!
கனிவுடனே சிரிக்கையிலும்….
கடுங்கோபச் சினங்கொண்டு எனை
எட்டி உதைக்கையிலும்…
உன் உதட்டழகு என்னிதயம் பற்றி
என் உள்ளம் பூரிக்குதடி…!!!!
ஞாயிறு, 9 செப்டம்பர், 2007
ஆதங்கம்....!
இன்று என் இதய வாசலில்
நீர் தெளித்து கோலமிட்டவளே...
நீ, என் வீட்டுவாசலில்
கோலமிடுவது எப்போது...?
சூரியக் கோளில்
அள்ளி வந்த ஓர்வாளி
ஒளிப்பிளம்பு உன்
வதனம் - அடியே,
என் செவ்வாய்க்கிரகத்தின்
செந்தாமரையே என்றுன்
முகம் பார்க்கும்
கூர்ப்படைவேன்...!
நீர் தெளித்து கோலமிட்டவளே...
நீ, என் வீட்டுவாசலில்
கோலமிடுவது எப்போது...?
சூரியக் கோளில்
அள்ளி வந்த ஓர்வாளி
ஒளிப்பிளம்பு உன்
வதனம் - அடியே,
என் செவ்வாய்க்கிரகத்தின்
செந்தாமரையே என்றுன்
முகம் பார்க்கும்
கூர்ப்படைவேன்...!
சிந்தனை...
என்னருமைத் தோழர்களே...!
கூட்டமாய் வாரீர்...!
சூரியக் காட்டினின்
தீ கொண்டு வந்தே - நம்
தீந்தமிழ் அன்னைக்கு
ஒளி செய்திடுவோம்....!
நட்சத்திரத் தோட்டத்தில்
கீற்றெடுத்து - நல்ல வால்வெள்ளியின்
நுனியிடைக்கட்டி அவள்
ஒட்டடை தட்டிடுவோம்
பூமியின் மையத்து நூதனம் முதல்
செவ்வாய் தாண்டிய சாதனம் வரை
நம் தமிழ் மொழியில்
பொறித்திடுவோம் வாரீர்....?
கூட்டமாய் வாரீர்...!
சூரியக் காட்டினின்
தீ கொண்டு வந்தே - நம்
தீந்தமிழ் அன்னைக்கு
ஒளி செய்திடுவோம்....!
நட்சத்திரத் தோட்டத்தில்
கீற்றெடுத்து - நல்ல வால்வெள்ளியின்
நுனியிடைக்கட்டி அவள்
ஒட்டடை தட்டிடுவோம்
பூமியின் மையத்து நூதனம் முதல்
செவ்வாய் தாண்டிய சாதனம் வரை
நம் தமிழ் மொழியில்
பொறித்திடுவோம் வாரீர்....?
லயத்தின் நிறைவு...
காட்டினை எரிக்கும்
தீங்கோபம் இருப்பினும்
என்னவள் நினைவில்
நதியாய் ஓடுவேன்...
ஒவ்வொரு விடியலும்,
ஒவ்வொரு இரவிலும் - ஏன்
ஒவ்வொரு செயலிலும்
சூரியக்கதிரிடை
தண்மணம் பரப்பிடும்
கமல வதனத்தாள்
என்னிடைக் காண்கின்றேன்
புரட்டிய ஏட்டின்
முகவுரையாள் - என்
கடிகாரத்தின் ஒலி
யுடையாள் - என்
இதயத்துடிப்பின் லயத்தினூடே காணும்
இடைவெளிகளில் நிறைந்திருப்பாள்
தீங்கோபம் இருப்பினும்
என்னவள் நினைவில்
நதியாய் ஓடுவேன்...
ஒவ்வொரு விடியலும்,
ஒவ்வொரு இரவிலும் - ஏன்
ஒவ்வொரு செயலிலும்
சூரியக்கதிரிடை
தண்மணம் பரப்பிடும்
கமல வதனத்தாள்
என்னிடைக் காண்கின்றேன்
புரட்டிய ஏட்டின்
முகவுரையாள் - என்
கடிகாரத்தின் ஒலி
யுடையாள் - என்
இதயத்துடிப்பின் லயத்தினூடே காணும்
இடைவெளிகளில் நிறைந்திருப்பாள்
கற்பனையற்ற உண்மை....
எனது வாழ்க்கைப் பயணத்தின்
குறிப்பேடுகளைப் புரட்ட
முயல்கின்றேன்....!
இன்றிலிருந்து சிலவருடங்களுக்கு
முன்பு......
என் பெயர் சொல்லி
அழைத்த நிலாவின்
முகம் பார்த்து கண்
இமைப்பதை மறந்தேன்...!
தற்காலிகமாக் உள்ளே
நுழைந்து நிரந்தரமாக
இடமொன்று பிடித்தாள்....!
'டே' என்று அழைத்துப்
பின் அனுமதிகேட்டாள்;
அழைக்கவா என்று....!
புன்னகையைத்தவிர
தோன்றவே இல்லை
வேரொரு வார்த்தை...!
குறிப்பேடுகளைப் புரட்ட
முயல்கின்றேன்....!
இன்றிலிருந்து சிலவருடங்களுக்கு
முன்பு......
என் பெயர் சொல்லி
அழைத்த நிலாவின்
முகம் பார்த்து கண்
இமைப்பதை மறந்தேன்...!
தற்காலிகமாக் உள்ளே
நுழைந்து நிரந்தரமாக
இடமொன்று பிடித்தாள்....!
'டே' என்று அழைத்துப்
பின் அனுமதிகேட்டாள்;
அழைக்கவா என்று....!
புன்னகையைத்தவிர
தோன்றவே இல்லை
வேரொரு வார்த்தை...!
வியப்பு....
இதோ....!
ஓரத்தெருவோரம் சிந்திய பூக்களும்
மணம் பெற்றுச் சிலிர்க்கின்றனவே....!
உன் பாதச்சுவடுகளில்
நசுங்கி உயிர்த்தவையோ....!
ஓரத்தெருவோரம் சிந்திய பூக்களும்
மணம் பெற்றுச் சிலிர்க்கின்றனவே....!
உன் பாதச்சுவடுகளில்
நசுங்கி உயிர்த்தவையோ....!
நினைவு
என் உணவு நேரங்களின்
புரையேறும் நிமிடங்களைக்
கேட்டுப்பார்.....!
உன் நினைவலைக்கள் தொடர்ந்து
எனைத்தாகட்டுமே என்று
நீர் அருந்தியதே இல்லை.....!
புரையேறும் நிமிடங்களைக்
கேட்டுப்பார்.....!
உன் நினைவலைக்கள் தொடர்ந்து
எனைத்தாகட்டுமே என்று
நீர் அருந்தியதே இல்லை.....!
யதார்த்தம்.....!
எரிந்து எரிந்து கரியும்
விறகாய் - நின்று
வெகுண்டு வெகுண்டு அடங்கிய
சோதரா....!
எதிரிக்கும் திண்ணையில்
விருந்திட்டு மகிழ்ந்திட்ட - என்
அருந்தமிழினமிங்கு பாழ்பட்டுப்
போவதா.....!
நேற்றைய வடுக்கள் முதற்
சுழி போடட்டும் - அன்று
பூட்டிய கதவுகள் திறந்தே
சாயாதா.....!
சகோதரர் நம்மிடை இனவாதம்
மூட்டிடும் பாதக
நெஞ்சர் எம்ம்மிடைச்சிக்கின்
மீள்வாரா....!
துப்பாக்கி வேட்டிலே துளைபட்ட
பனையிதுவா; கலங்காதே....!
நம் செல்லக்கிளிகளுக்கும்
வீடுகள் தேவைதான்...!
விறகாய் - நின்று
வெகுண்டு வெகுண்டு அடங்கிய
சோதரா....!
எதிரிக்கும் திண்ணையில்
விருந்திட்டு மகிழ்ந்திட்ட - என்
அருந்தமிழினமிங்கு பாழ்பட்டுப்
போவதா.....!
நேற்றைய வடுக்கள் முதற்
சுழி போடட்டும் - அன்று
பூட்டிய கதவுகள் திறந்தே
சாயாதா.....!
சகோதரர் நம்மிடை இனவாதம்
மூட்டிடும் பாதக
நெஞ்சர் எம்ம்மிடைச்சிக்கின்
மீள்வாரா....!
துப்பாக்கி வேட்டிலே துளைபட்ட
பனையிதுவா; கலங்காதே....!
நம் செல்லக்கிளிகளுக்கும்
வீடுகள் தேவைதான்...!
திங்கள், 3 செப்டம்பர், 2007
பொறாமை...
உன் தோடுகளைப் பார்க்க....
பொறாமையாய் இருக்கிறது....!
என் நேரமும் அவைகளால் தானே
உன்னிடம் இரகசியம் பேச முடிகின்றது....!
பொறாமையாய் இருக்கிறது....!
என் நேரமும் அவைகளால் தானே
உன்னிடம் இரகசியம் பேச முடிகின்றது....!
ஞாயிறு, 2 செப்டம்பர், 2007
ஒரு பிரியாவிடை நாள்....
என் அன்புத் தோழுமைகளே...
பலமுறை அழத்துடித்தும் என்
பேனா என்னால் அடக்கப்பட்டிருந்தது....!
இன்று....,
உடைக்கப்பட்ட அணைக்கட்டின்
ஊற்றுயிராய், என்னையும்
உடைத்து கசிகின்றது....!
இதோ என் பேனாவில்...
சிந்தப்பட்ட உதிரத்துளிகளில் சில....!
என் முகத்தில் அவ்வப்போது
கீறல்களாய் வெளிப்படும்
புன்னகையின் அர்த்தம்
வினவுவீர்களே...
காவோலை விழக் குருத்தோலை
சிரிக்கும் சிரிப்புத்தன் அது....
தவறாக எண்ணாதீர்கள்...
உங்கள் வயதெல்லாம் நானறியேன்...
உங்கள் கண்களில் நான்
பார்த்த அனுபவத் திட்டுக்களை
வைத்தே என்னைக் குருத்தோலை என்றேன்...
தற்செயலான சந்திப்புகளில்
அகமகிழ்ந்தவன் நான்....!
இன்று த்விர்க்க முடியாத பிரிவுகளிலும்
புன்னகைக்க எண்ணுகின்றேன்...
குருதோலையாய் அல்ல....
காவோலையாய்..., இருந்தும்
கணணீர் மடல்களை உடைக்கின்றது....
நேசக்கரங்கள் விலங்கிடப்பட்டதை
எண்ணி வருந்தாதீர்.... நம்
இதயச் சாவிகள் அவிழ்த்தெறியும்....!
சமிபாடு அடையாத வலிகளை
எண்ணி வருந்தாதீர்.....
எப்பொழுதெல்லாம் முகங்கள்
மலர்கின்றதோ அப்போதெல்லாம்
சமிபாட்டு மாத்திரைகள் உற்பத்தியாகும்...
எப்பொழுதெல்லாம் உங்கள்
கால்கள் இடறுகின்றனவோ...
அப்போதெல்லாம் நானில்லை
என்றாலும் என் இதயம்
உங்களைத் தாங்கும்....!
பலமுறை அழத்துடித்தும் என்
பேனா என்னால் அடக்கப்பட்டிருந்தது....!
இன்று....,
உடைக்கப்பட்ட அணைக்கட்டின்
ஊற்றுயிராய், என்னையும்
உடைத்து கசிகின்றது....!
இதோ என் பேனாவில்...
சிந்தப்பட்ட உதிரத்துளிகளில் சில....!
என் முகத்தில் அவ்வப்போது
கீறல்களாய் வெளிப்படும்
புன்னகையின் அர்த்தம்
வினவுவீர்களே...
காவோலை விழக் குருத்தோலை
சிரிக்கும் சிரிப்புத்தன் அது....
தவறாக எண்ணாதீர்கள்...
உங்கள் வயதெல்லாம் நானறியேன்...
உங்கள் கண்களில் நான்
பார்த்த அனுபவத் திட்டுக்களை
வைத்தே என்னைக் குருத்தோலை என்றேன்...
தற்செயலான சந்திப்புகளில்
அகமகிழ்ந்தவன் நான்....!
இன்று த்விர்க்க முடியாத பிரிவுகளிலும்
புன்னகைக்க எண்ணுகின்றேன்...
குருதோலையாய் அல்ல....
காவோலையாய்..., இருந்தும்
கணணீர் மடல்களை உடைக்கின்றது....
நேசக்கரங்கள் விலங்கிடப்பட்டதை
எண்ணி வருந்தாதீர்.... நம்
இதயச் சாவிகள் அவிழ்த்தெறியும்....!
சமிபாடு அடையாத வலிகளை
எண்ணி வருந்தாதீர்.....
எப்பொழுதெல்லாம் முகங்கள்
மலர்கின்றதோ அப்போதெல்லாம்
சமிபாட்டு மாத்திரைகள் உற்பத்தியாகும்...
எப்பொழுதெல்லாம் உங்கள்
கால்கள் இடறுகின்றனவோ...
அப்போதெல்லாம் நானில்லை
என்றாலும் என் இதயம்
உங்களைத் தாங்கும்....!
என்னவளுக்கு....
என் கல்லூரிப் பூங்காவின் உதிர்ந்த
பூக்களைக் கேட்டுப்பார்....!
உன் கூந்தல் வாசனையை எண்ணி,
வெட்கி மரணித்தவை அவை...!
பூக்களைக் கேட்டுப்பார்....!
உன் கூந்தல் வாசனையை எண்ணி,
வெட்கி மரணித்தவை அவை...!
சனி, 1 செப்டம்பர், 2007
நிச்சயம்...
என்றாவது ஒரு நாள்..
ஒர் கணங்கிடைத்தால்...
மனமிருந்தால் - அதில்
என் நினைவிருந்தால்
என் சுடுகாட்டுச்
சாம்பலையாவது
போய்ப்பார் - உன் கணவனுடன்;
அன்றும் என் சாம்பலின் ஒவ்வொரு
அணுவின் இலத்திரன்களும் - நான்
கொண்ட உன் நினைவுகளை
காற்றில் கண்டிப்பாய்
எழுதி இரசித்துக் கொண்டிருக்கும்....!
ஒர் கணங்கிடைத்தால்...
மனமிருந்தால் - அதில்
என் நினைவிருந்தால்
என் சுடுகாட்டுச்
சாம்பலையாவது
போய்ப்பார் - உன் கணவனுடன்;
அன்றும் என் சாம்பலின் ஒவ்வொரு
அணுவின் இலத்திரன்களும் - நான்
கொண்ட உன் நினைவுகளை
காற்றில் கண்டிப்பாய்
எழுதி இரசித்துக் கொண்டிருக்கும்....!
நம்பிக்கை....
திரும்பி வருவோம் என்ற அதீத
நம்பிக்கையில்தான் ஒவ்வொரு
முறையும் காற்று மண்டலம்
நுரையீரல் தொடுகின்றது....
முட்டி மோதி முளைத்து
தளைப்போம் என்ற
நம்பிக்கையில்தான் விதைகள்
மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன...
ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த
சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும்
நம்பிக்கையில் தான் - தினமும்
பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது...
இன்றில்லாவிடிலும் என்றாவது
ஒருநாள் எனை நீ உணர்வாய்
எனும் அதீத நம்பிக்கையில் தான் உன்
நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்...
திங்கள், 5 மார்ச், 2007
பொறாமை...
உன் மெல்லுடல் வளைத்து
நான் பரிசளித்த கண்ணடியில் - உன்
பிறை நுதல் பொட்டைச் சரிசெய்தாயே...!
பொறாமைப்பட்டேன்....
கண்ணாடியாய்யாவது பிறந்திருக்கலாம்....!
நான் பரிசளித்த கண்ணடியில் - உன்
பிறை நுதல் பொட்டைச் சரிசெய்தாயே...!
பொறாமைப்பட்டேன்....
கண்ணாடியாய்யாவது பிறந்திருக்கலாம்....!
செவ்வாய், 2 ஜனவரி, 2007
சமர்ப்பணம்.....
தமிழன்னைத் தெருவோரம்
இலக்கியக் கடைகளில்
புதுக்கவிதை இனிப்புத்தின்றவன்
இன்று அதே தெருவோரம்
இனிப்புச் செய்ய முயல்கின்றேன்
ஆம்...
புதுக்கவிதைக் கடலினிலே - ஓர்
துளியளவு இறைக்க நினைத்து
எழுதுகோல் தாங்கிவிட்டேன்...
பெற்றெடுத்த தமிழ்த்தாயே....!
வளர்த்துவிட்ட தாய்த்தமிழே...!
அனைத்தும் உங்களுக்கே
சமர்ப்பணம்.....
இலக்கியக் கடைகளில்
புதுக்கவிதை இனிப்புத்தின்றவன்
இன்று அதே தெருவோரம்
இனிப்புச் செய்ய முயல்கின்றேன்
ஆம்...
புதுக்கவிதைக் கடலினிலே - ஓர்
துளியளவு இறைக்க நினைத்து
எழுதுகோல் தாங்கிவிட்டேன்...
பெற்றெடுத்த தமிழ்த்தாயே....!
வளர்த்துவிட்ட தாய்த்தமிழே...!
அனைத்தும் உங்களுக்கே
சமர்ப்பணம்.....
திங்கள், 1 ஜனவரி, 2007
விந்தை....
ரோசா முள் தைத்து வலி
உணர்ந்திருப்பீர்கள் - இங்கு
ரோசாவே முள்ளாகத் தைக்கும்
விந்தை பார்த்தீரோ...!
உணர்ந்திருப்பீர்கள் - இங்கு
ரோசாவே முள்ளாகத் தைக்கும்
விந்தை பார்த்தீரோ...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
