நாம்...!
நேற்றைய செவ்வயல்களில்
தோற்றிய வீரப்புற்கள்
நாளைய வேள்விக்காய்
இன்றே மரணிக்கும்
தருப்பைப் புற்கள்...!
நாளைய வேள்வியின்
சுதந்திர யோதிக்காய்
இன்றே சாம்பராகும்
தன்மானப் புற்கள்...!
இறுதி வேரின்
உறுதித் துகள்
உள்ளவரை
பல பிறவி எடுத்து
நாளைய வேள்வியின்
நாமுமோர் அங்கமாவோம்...!
திங்கள், 15 டிசம்பர், 2008
ஞாயிறு, 14 டிசம்பர், 2008
நீர்த்திவலையும் தாமரையிலையும்...!
தாமரை இலையின்
நீர்த் திவலை...!
எத்தனை முறை தான்
நீர் நினைத்தாலும்
ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்;
நீர் பலமுறை சினந்திருக்கின்றது
இலைக்கு புரியவில்லையே என்று...!
பாவம் இலை...!
அதனால் என்ன செய்யமுடியும்
அதன் நெஞ்சுக்குள்ளும்
ஈரமுண்டு...
அதைவிட அதிகமாய்
வலிகளும் நிறையவே உண்டு
தடாக நீருக்கும்
நீர்த் திவலைக்குமிடையே
தடுமாறுகின்றது - இலை
எத்தனை முறைதான்
நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள
நினைத்தாலும்...
அதன் ஸ்பரிசத்தை
மட்டுமே இலையால்
கைது செய்ய முடிகின்றது.
இலை அழுதகண்ணீரில் தான்
தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது
எத்தனை பூக்களுக்குத் தெரியும்
இருந்தாலும் என்ன...
நீர் இருக்கும் வரை
அதனைத் தன்மீது
தாங்கி...
பழகமட்டுமே முடியும்
இலையினால்...!
நீர்த் திவலை...!
எத்தனை முறை தான்
நீர் நினைத்தாலும்
ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்;
நீர் பலமுறை சினந்திருக்கின்றது
இலைக்கு புரியவில்லையே என்று...!
பாவம் இலை...!
அதனால் என்ன செய்யமுடியும்
அதன் நெஞ்சுக்குள்ளும்
ஈரமுண்டு...
அதைவிட அதிகமாய்
வலிகளும் நிறையவே உண்டு
தடாக நீருக்கும்
நீர்த் திவலைக்குமிடையே
தடுமாறுகின்றது - இலை
எத்தனை முறைதான்
நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள
நினைத்தாலும்...
அதன் ஸ்பரிசத்தை
மட்டுமே இலையால்
கைது செய்ய முடிகின்றது.
இலை அழுதகண்ணீரில் தான்
தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது
எத்தனை பூக்களுக்குத் தெரியும்
இருந்தாலும் என்ன...
நீர் இருக்கும் வரை
அதனைத் தன்மீது
தாங்கி...
பழகமட்டுமே முடியும்
இலையினால்...!
கவிதையின் பிறப்புக்காரணம்
புயல்கள் நிலைகொண்டாலே
தவிர...
தென்றலாக இருந்தால்
காற்றின் பிறப்புக்காரணம்
அறிய முயல்வதில்லை நாம்...!
அப்படித்தான்... கவிதைகளும்
அடுத்தவரை சாடாதவரைக்கும்
பிறப்புக்காரணம்
கவிஞனுக்கு மட்டுமே புரிந்த
இரகசியம்...!
தவிர...
தென்றலாக இருந்தால்
காற்றின் பிறப்புக்காரணம்
அறிய முயல்வதில்லை நாம்...!
அப்படித்தான்... கவிதைகளும்
அடுத்தவரை சாடாதவரைக்கும்
பிறப்புக்காரணம்
கவிஞனுக்கு மட்டுமே புரிந்த
இரகசியம்...!
சனி, 13 டிசம்பர், 2008
நீ.... நான்.... அது....!
நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று...!
ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்...!
ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது....!
ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்...!
அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை
நீ....
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்...!
நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி...
எனக்கில்லை...!
இருந்தாலும்...
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது....!
கடலைப் பார்த்திருப்பய்...!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்
அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்...
கரைகடந்த
அலை - ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.
சிறு தென்றலாய்....
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு - அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல...!
ஆக...,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே...?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?
நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது...
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்...!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்....!
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று...!
ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்...!
ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது....!
ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்...!
அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை
நீ....
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்...!
நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி...
எனக்கில்லை...!
இருந்தாலும்...
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது....!
கடலைப் பார்த்திருப்பய்...!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்
அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்...
கரைகடந்த
அலை - ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.
சிறு தென்றலாய்....
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு - அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல...!
ஆக...,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே...?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?
நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது...
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்...!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்....!
கார்த்திகை விளக்கீடு
என்று சொந்த ஊரைவிட்டு புறப்பட்டோமோ அன்றே உணர்விளக்கத் தொடங்கிவிட்டன
எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு
ஒன்றும்விதிவிலக்கல்ல.
நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள்
கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே
வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும்.
குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி
ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம்.
நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு
சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து
குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னும் இருக்கு.
பந்தம் சுற்றும் கதை இப்படி என்றால், வாழைத்தார் வெட்டும் படலம் இன்னும்
சுவாரசியமானது. பின்னேரம் ஆவதற்குள் படலை வாசலில் வாழை நட்டு, யார் வீட்டு
வாழைத்தண்டு பருமன் கூடியது எண்டு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
சூரியன் மறையும் வரை காத்திருந்து, சுவாமி அறைக்கு ஒண்டு, குசினிக்கு
ஒண்டு, அம்மி, ஆட்டுக்கல்லுக்கு ஒண்டு, கிணதடிக்கு ஒண்டு,
மாட்டுக்கொட்டிலுக்கு ஒண்டு, குப்பை மேட்டுக்கு ஒண்டு, என்று எல்லா இடமும்
பந்தம் கொழுத்தி வைத்துவிட்டு, படலையிலே இருக்கும் வாழைத் தாரில்
பாதித்தேங்காயில் சிறிது தேங்காய் எண்ணை விட்டு, சீலைத்துணி போட்டு அதைக்
கொழுத்தி அழகு பார்த்தோமே....!
எங்கட வீட்டு தேங்காய் எரிஞ்சு முடிய வெளிக்கிடுவம். ஊர் சுத்த.... ஒராள்
ரண்டு பேர் போரில்ல. எப்பிடியும் குறைஞ்சது 8, 10 பேர் இருப்பம். பறாளாய்
ரோட்டில தொடங்கி, காழுவன் சந்தி போய் அப்பிடியே பானாவெட்டி
ஆஸ்பத்திரிக்கு முன்னால இருக்கிர குச்சொழுங்கைகால திரும்பி, வடக்கம்பரை
வரைக்கும் போய் ஒரு collection போடுவம். அது ஒரு
தனிவேட்டைதான். collection என்டோன்ன காசு என்டு நினைக்காதேங்கோ...!
7.30,... 8.00 மணிக்கு வெளிக்கிட்டா எல்லட்ட வீட்டிலயும் தேங்காய் கணக்கா
நெருப்பில வேகி மணம் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்த தேங்காய் சுடுரத தான்
சொன்னனான்.
ஒவ்வொருவரும் turn வச்சு, ஆளில்லாத வீட்டு தேங்காய்களை சுட்டுடுவம்ஒரு
தெருவில சுட்டு அடுத்த தெருவுக்கு போறதுக்குள்ள எல்லாருக்கும் பிரிச்சு
குடுத்து சாப்பிட்டு முடிச்சிடுவம். சுடச்சுட தேத்தண்ணி குடிக்க தெரியாத
நான் அந்த வயசில எப்படியாவது அடுத்த ஒழுங்கைக்க போறதுக்கு முதல்
சாப்பிடவேணும் எண்டு சாப்பிட்டு கிடைச்ச experience சை வச்சு தான் பிறகு
வீட்டில சுடச் சுட தேத்தண்ணி குடிக்க தொடங்கினனான் என்டா பாருங்கவன்.
எவ்வளவு வேகமா தேங்கா சாப்பிட்டு இருப்பம் எண்டு. தேங்க்க எடுக்க போய்
வீட்டுக்காறறிட்ட மாட்டுப்பட்ட கதையும் இருக்கு. ஒருக்கா இப்பிடித்தான்
ஒரு கூட்டாளிப்பெடியன் வீட்ட தேங்கா எடுக்க போய் அவன்ட அப்பர் பாத்து
கத்த, பானாவெட்டிக்கு முன்னால ஓடவெளிக்கிட்டனாங்கள் ஐக்கியசங்க பள்ளிக்குட
குச்சுக்க போய்தான் திரும்பி பாத்தனாங்கள்.
ம்ஹ்...., எல்லாம் இப்ப நினைச்சு பாக்க மட்டும் தான் முடியுது....! இப்ப
இங்க யார் வாழை வச்சு விளக்கு கொழுத்தினம். எங்களுக்கு கிடைச்ச இந்த
அருமையான அனுபவம் எல்லாம் எங்கட பிள்ளைகளுக்கு கிடைக்கும் எண்டு நான்
நினைக்கேல்ல...! இருந்தாலும் ஒரு நப்பாச. திரும்பவும், எங்களுக்கு நாடு
கிடைச்சு மறுபடியும் ஊரில போய் வாழ கிடைச்சா கண்டிப்பா என்டை
பிள்ளைகளையும் கூட்டிட்டு தேங்காய் எடுக்க போவன்....!
எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு
ஒன்றும்விதிவிலக்கல்ல.
நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள்
கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே
வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும்.
குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி
ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம்.
நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு
சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து
குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னும் இருக்கு.
பந்தம் சுற்றும் கதை இப்படி என்றால், வாழைத்தார் வெட்டும் படலம் இன்னும்
சுவாரசியமானது. பின்னேரம் ஆவதற்குள் படலை வாசலில் வாழை நட்டு, யார் வீட்டு
வாழைத்தண்டு பருமன் கூடியது எண்டு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
சூரியன் மறையும் வரை காத்திருந்து, சுவாமி அறைக்கு ஒண்டு, குசினிக்கு
ஒண்டு, அம்மி, ஆட்டுக்கல்லுக்கு ஒண்டு, கிணதடிக்கு ஒண்டு,
மாட்டுக்கொட்டிலுக்கு ஒண்டு, குப்பை மேட்டுக்கு ஒண்டு, என்று எல்லா இடமும்
பந்தம் கொழுத்தி வைத்துவிட்டு, படலையிலே இருக்கும் வாழைத் தாரில்
பாதித்தேங்காயில் சிறிது தேங்காய் எண்ணை விட்டு, சீலைத்துணி போட்டு அதைக்
கொழுத்தி அழகு பார்த்தோமே....!
எங்கட வீட்டு தேங்காய் எரிஞ்சு முடிய வெளிக்கிடுவம். ஊர் சுத்த.... ஒராள்
ரண்டு பேர் போரில்ல. எப்பிடியும் குறைஞ்சது 8, 10 பேர் இருப்பம். பறாளாய்
ரோட்டில தொடங்கி, காழுவன் சந்தி போய் அப்பிடியே பானாவெட்டி
ஆஸ்பத்திரிக்கு முன்னால இருக்கிர குச்சொழுங்கைகால திரும்பி, வடக்கம்பரை
வரைக்கும் போய் ஒரு collection போடுவம். அது ஒரு
தனிவேட்டைதான். collection என்டோன்ன காசு என்டு நினைக்காதேங்கோ...!
7.30,... 8.00 மணிக்கு வெளிக்கிட்டா எல்லட்ட வீட்டிலயும் தேங்காய் கணக்கா
நெருப்பில வேகி மணம் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்த தேங்காய் சுடுரத தான்
சொன்னனான்.
ஒவ்வொருவரும் turn வச்சு, ஆளில்லாத வீட்டு தேங்காய்களை சுட்டுடுவம்ஒரு
தெருவில சுட்டு அடுத்த தெருவுக்கு போறதுக்குள்ள எல்லாருக்கும் பிரிச்சு
குடுத்து சாப்பிட்டு முடிச்சிடுவம். சுடச்சுட தேத்தண்ணி குடிக்க தெரியாத
நான் அந்த வயசில எப்படியாவது அடுத்த ஒழுங்கைக்க போறதுக்கு முதல்
சாப்பிடவேணும் எண்டு சாப்பிட்டு கிடைச்ச experience சை வச்சு தான் பிறகு
வீட்டில சுடச் சுட தேத்தண்ணி குடிக்க தொடங்கினனான் என்டா பாருங்கவன்.
எவ்வளவு வேகமா தேங்கா சாப்பிட்டு இருப்பம் எண்டு. தேங்க்க எடுக்க போய்
வீட்டுக்காறறிட்ட மாட்டுப்பட்ட கதையும் இருக்கு. ஒருக்கா இப்பிடித்தான்
ஒரு கூட்டாளிப்பெடியன் வீட்ட தேங்கா எடுக்க போய் அவன்ட அப்பர் பாத்து
கத்த, பானாவெட்டிக்கு முன்னால ஓடவெளிக்கிட்டனாங்கள் ஐக்கியசங்க பள்ளிக்குட
குச்சுக்க போய்தான் திரும்பி பாத்தனாங்கள்.
ம்ஹ்...., எல்லாம் இப்ப நினைச்சு பாக்க மட்டும் தான் முடியுது....! இப்ப
இங்க யார் வாழை வச்சு விளக்கு கொழுத்தினம். எங்களுக்கு கிடைச்ச இந்த
அருமையான அனுபவம் எல்லாம் எங்கட பிள்ளைகளுக்கு கிடைக்கும் எண்டு நான்
நினைக்கேல்ல...! இருந்தாலும் ஒரு நப்பாச. திரும்பவும், எங்களுக்கு நாடு
கிடைச்சு மறுபடியும் ஊரில போய் வாழ கிடைச்சா கண்டிப்பா என்டை
பிள்ளைகளையும் கூட்டிட்டு தேங்காய் எடுக்க போவன்....!
திங்கள், 1 டிசம்பர், 2008
ஓயாது எங்கள் கரம்...
மருந்தாக நின்றவர்
வெளியேறிச் சென்றாலும்...
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்...!
தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை....
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்...!
கொண்ட கொள்கை
வென்றெடுத்து...
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்...!
வெளியேறிச் சென்றாலும்...
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்...!
தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை....
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்...!
கொண்ட கொள்கை
வென்றெடுத்து...
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்...!
சனி, 22 நவம்பர், 2008
நட்பு
கடல்...
பல நதிகளின்
சந்தோச சங்கமம்
நட்பு...
பல மனச் சுடர்களின்
சங்கம சந்தோசம்...
கடல் என்றுமே
எதிர்பார்த்ததில்லை
நதிகளின் குலாவலையோ...
அல்லது தழுவலையோ....!
நட்பும் அப்படித்தான்...
மனங்கள் உரசினாலும் சரி
மனங்கள் மணந்தாலும் சரி
மரணிக்காத சொந்தங்களின்
மறுக்காத உரசல்கள்....
அலைக்களின் ஆர்ப்பரிப்பும்
நட்பின் சிதறல்களும்
ஒன்றென்பேன்...!
அவை என்றுமே
தாமாக நிகழ்வதில்லை
காற்றின் உந்துதல்
அலைகளின் பிறப்பு என்றால்
காலத்தின் கட்டாயம்
நட்பின் சிதறலாகின்றது...
சுனாமிப் பேரலையாய்
கடல் வெடித்துத்
தெறித்தாலும்
மீண்டும் கடல் சேர்வதில்லையா...???
அப்படித்தான் - நட்பின் சிதறலும்
ஆனாலும் என்ன
சுனாமிக்குப் பின்னும்
உடைந்த உள்ளங்களுக்கு பின்னும்
ஏற்படும் வடுக்கள்
காலச் சக்கரம் எப்படிச்
சுழன்றாலும்....
சத்தியாமாய் அழிக்கமுடியாத
உண்மையின் வெளிப்பாடுகள்....!!!
பல நதிகளின்
சந்தோச சங்கமம்
நட்பு...
பல மனச் சுடர்களின்
சங்கம சந்தோசம்...
கடல் என்றுமே
எதிர்பார்த்ததில்லை
நதிகளின் குலாவலையோ...
அல்லது தழுவலையோ....!
நட்பும் அப்படித்தான்...
மனங்கள் உரசினாலும் சரி
மனங்கள் மணந்தாலும் சரி
மரணிக்காத சொந்தங்களின்
மறுக்காத உரசல்கள்....
அலைக்களின் ஆர்ப்பரிப்பும்
நட்பின் சிதறல்களும்
ஒன்றென்பேன்...!
அவை என்றுமே
தாமாக நிகழ்வதில்லை
காற்றின் உந்துதல்
அலைகளின் பிறப்பு என்றால்
காலத்தின் கட்டாயம்
நட்பின் சிதறலாகின்றது...
சுனாமிப் பேரலையாய்
கடல் வெடித்துத்
தெறித்தாலும்
மீண்டும் கடல் சேர்வதில்லையா...???
அப்படித்தான் - நட்பின் சிதறலும்
ஆனாலும் என்ன
சுனாமிக்குப் பின்னும்
உடைந்த உள்ளங்களுக்கு பின்னும்
ஏற்படும் வடுக்கள்
காலச் சக்கரம் எப்படிச்
சுழன்றாலும்....
சத்தியாமாய் அழிக்கமுடியாத
உண்மையின் வெளிப்பாடுகள்....!!!
அன்றொருநாள்...!
நகரம் எல்லாம் ஒளியிழந்து
மயக்கத்தில் தயங்கி நின்ற
மாலை ஒன்றில்..
கார்மேகம் புடைசூழ்ந்து
வான் மறைத்து நின்ற வேளை
வானமதோ பூமி தொலைத்து
தேம்பித் தேம்பி அழுதிருக்க
மின்னல் ஒளி அனுப்பி பூமி தேட
முனைப்பாய் முயன்ற வேளை
அருகேஒரு நிலவு வைத்து
விந்தைதனை இரசித்திருந்தேன்..!
மயக்கத்தில் தயங்கி நின்ற
மாலை ஒன்றில்..
கார்மேகம் புடைசூழ்ந்து
வான் மறைத்து நின்ற வேளை
வானமதோ பூமி தொலைத்து
தேம்பித் தேம்பி அழுதிருக்க
மின்னல் ஒளி அனுப்பி பூமி தேட
முனைப்பாய் முயன்ற வேளை
அருகேஒரு நிலவு வைத்து
விந்தைதனை இரசித்திருந்தேன்..!
வெள்ளி, 17 அக்டோபர், 2008
இன்னும் ஒரு நாள்
மற்றுமோர் காலை
புலர்ந்துகொண்டிருக்கிறது
ஐப்பசி 17ந் திகதி அதிகாலை 3.29
யாருக்குத்தெரியும்
எத்தனை இராணுவம்
வீதிமறித்து நிற்கின்றதோ...!
யாருக்குத்தெரியும்
எந்தத் தெருக்கோடியில்
குண்டு வெடிக்குமோ...!
யாருக்குத்தெரியும்
பட்டினியாய் இருக்கும்
அனைவருக்கும் ஒர் கவளை
உணவு கிடைக்குமோ...!
நான் இங்கு...
பென்டியம் கணணி...
ரகுமான் பாடல்
சொகுசுக் கதிரை
மின்விசிறி வாழ்க்கையில்
புலர்ந்துகொண்டிருக்கிறது
ஐப்பசி 17ந் திகதி அதிகாலை 3.29
யாருக்குத்தெரியும்
எத்தனை இராணுவம்
வீதிமறித்து நிற்கின்றதோ...!
யாருக்குத்தெரியும்
எந்தத் தெருக்கோடியில்
குண்டு வெடிக்குமோ...!
யாருக்குத்தெரியும்
பட்டினியாய் இருக்கும்
அனைவருக்கும் ஒர் கவளை
உணவு கிடைக்குமோ...!
நான் இங்கு...
பென்டியம் கணணி...
ரகுமான் பாடல்
சொகுசுக் கதிரை
மின்விசிறி வாழ்க்கையில்
வியாழன், 16 அக்டோபர், 2008
தமிழ்க் காற்று
தினம் தினம் கைதியாகி...
தமிழ் கூட மறந்துவிட
மணிக்கு ஒர் கவிதை செய்தோன்...
ஆண்டுக்கொன்று சமைக்கவந்தேன்....!
அன்றைய நாட்கள்...!
பேனா எடுத்து
காகிதம் தாங்கினால்
சும்மா வந்து கொட்டும்
அன்னைத்தமிழ்...!!!
அதுவும் மாலை நேர
மழை நாளில், கடற்கரை
ஓரம் என்றால்
சொல்லவும் தேவையில்லை
இக்கட்டடப் பெருங்காட்டில்
மென்பொருட் கலைஞனாக
என்று வீழ்ந்தேனோ - அன்று
மறந்தது இந்த தமிழும் அதனுடன்
சேர்ந்து பாழாய்ப்போன கவிதையும்...
எதனை நாள் தான்
அந்நிய மொழியை சுவாசிப்பது...?
எவ்வளவு தான் வேகமாய்
மூச்சுவிட்டாலும்
உடனேயே முட்டுகின்றது - மூச்சு
தினம் ஒருமுறையாவது
தமிழ் காற்றுத்தாருங்கள்...
சுத்தமாய் சுவாசித்து
நீண்டநாள் ஆகிவிட்டது...!
தமிழ் கூட மறந்துவிட
மணிக்கு ஒர் கவிதை செய்தோன்...
ஆண்டுக்கொன்று சமைக்கவந்தேன்....!
அன்றைய நாட்கள்...!
பேனா எடுத்து
காகிதம் தாங்கினால்
சும்மா வந்து கொட்டும்
அன்னைத்தமிழ்...!!!
அதுவும் மாலை நேர
மழை நாளில், கடற்கரை
ஓரம் என்றால்
சொல்லவும் தேவையில்லை
இக்கட்டடப் பெருங்காட்டில்
மென்பொருட் கலைஞனாக
என்று வீழ்ந்தேனோ - அன்று
மறந்தது இந்த தமிழும் அதனுடன்
சேர்ந்து பாழாய்ப்போன கவிதையும்...
எதனை நாள் தான்
அந்நிய மொழியை சுவாசிப்பது...?
எவ்வளவு தான் வேகமாய்
மூச்சுவிட்டாலும்
உடனேயே முட்டுகின்றது - மூச்சு
தினம் ஒருமுறையாவது
தமிழ் காற்றுத்தாருங்கள்...
சுத்தமாய் சுவாசித்து
நீண்டநாள் ஆகிவிட்டது...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
