சனி, 1 செப்டம்பர், 2007

நிச்சயம்...

என்றாவது ஒரு நாள்..
ஒர் கணங்கிடைத்தால்...
மனமிருந்தால் - அதில்
என் நினைவிருந்தால்
என் சுடுகாட்டுச்
சாம்பலையாவது
போய்ப்பார் - உன் கணவனுடன்;

அன்றும் என் சாம்பலின் ஒவ்வொரு
அணுவின் இலத்திரன்களும் - நான்
கொண்ட உன் நினைவுகளை
காற்றில் கண்டிப்பாய்
எழுதி இரசித்துக் கொண்டிருக்கும்....!

கருத்துகள் இல்லை: