தாமரை இலையின்
நீர்த் திவலை...!
எத்தனை முறை தான்
நீர் நினைத்தாலும்
ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்;
நீர் பலமுறை சினந்திருக்கின்றது
இலைக்கு புரியவில்லையே என்று...!
பாவம் இலை...!
அதனால் என்ன செய்யமுடியும்
அதன் நெஞ்சுக்குள்ளும்
ஈரமுண்டு...
அதைவிட அதிகமாய்
வலிகளும் நிறையவே உண்டு
தடாக நீருக்கும்
நீர்த் திவலைக்குமிடையே
தடுமாறுகின்றது - இலை
எத்தனை முறைதான்
நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள
நினைத்தாலும்...
அதன் ஸ்பரிசத்தை
மட்டுமே இலையால்
கைது செய்ய முடிகின்றது.
இலை அழுதகண்ணீரில் தான்
தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது
எத்தனை பூக்களுக்குத் தெரியும்
இருந்தாலும் என்ன...
நீர் இருக்கும் வரை
அதனைத் தன்மீது
தாங்கி...
பழகமட்டுமே முடியும்
இலையினால்...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

2 கருத்துகள்:
நன்றாக உள்ளது. தாமரை இலைகளையும் தண்ணீரையும் பற்றி நான் நிறைய யோசிப்பதுண்டு.
நன்றி கலைவாணி.
கருத்துரையிடுக