சனி, 22 நவம்பர், 2008

அன்றொருநாள்...!

நகரம் எல்லாம் ஒளியிழந்து
மயக்கத்தில் தயங்கி நின்ற
மாலை ஒன்றில்..

கார்மேகம் புடைசூழ்ந்து
வான் மறைத்து நின்ற வேளை
வானமதோ பூமி தொலைத்து
தேம்பித் தேம்பி அழுதிருக்க
மின்னல் ஒளி அனுப்பி பூமி தேட
முனைப்பாய் முயன்ற வேளை

அருகேஒரு நிலவு வைத்து
விந்தைதனை இரசித்திருந்தேன்..!

கருத்துகள் இல்லை: