நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று...!
ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்...!
ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது....!
ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்...!
அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை
நீ....
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்...!
நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி...
எனக்கில்லை...!
இருந்தாலும்...
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது....!
கடலைப் பார்த்திருப்பய்...!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்
அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்...
கரைகடந்த
அலை - ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.
சிறு தென்றலாய்....
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு - அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல...!
ஆக...,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே...?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?
நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது...
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்...!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்....!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது....!
////////////
உணர்வுகள்
கருத்துரையிடுக