காட்டினை எரிக்கும்
தீங்கோபம் இருப்பினும்
என்னவள் நினைவில்
நதியாய் ஓடுவேன்...
ஒவ்வொரு விடியலும்,
ஒவ்வொரு இரவிலும் - ஏன்
ஒவ்வொரு செயலிலும்
சூரியக்கதிரிடை
தண்மணம் பரப்பிடும்
கமல வதனத்தாள்
என்னிடைக் காண்கின்றேன்
புரட்டிய ஏட்டின்
முகவுரையாள் - என்
கடிகாரத்தின் ஒலி
யுடையாள் - என்
இதயத்துடிப்பின் லயத்தினூடே காணும்
இடைவெளிகளில் நிறைந்திருப்பாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக