எரிந்து எரிந்து கரியும்
விறகாய் - நின்று
வெகுண்டு வெகுண்டு அடங்கிய
சோதரா....!
எதிரிக்கும் திண்ணையில்
விருந்திட்டு மகிழ்ந்திட்ட - என்
அருந்தமிழினமிங்கு பாழ்பட்டுப்
போவதா.....!
நேற்றைய வடுக்கள் முதற்
சுழி போடட்டும் - அன்று
பூட்டிய கதவுகள் திறந்தே
சாயாதா.....!
சகோதரர் நம்மிடை இனவாதம்
மூட்டிடும் பாதக
நெஞ்சர் எம்ம்மிடைச்சிக்கின்
மீள்வாரா....!
துப்பாக்கி வேட்டிலே துளைபட்ட
பனையிதுவா; கலங்காதே....!
நம் செல்லக்கிளிகளுக்கும்
வீடுகள் தேவைதான்...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக