ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

சிந்தனை...

என்னருமைத் தோழர்களே...!
கூட்டமாய் வாரீர்...!

சூரியக் காட்டினின்
தீ கொண்டு வந்தே - நம்
தீந்தமிழ் அன்னைக்கு
ஒளி செய்திடுவோம்....!

நட்சத்திரத் தோட்டத்தில்
கீற்றெடுத்து - நல்ல வால்வெள்ளியின்
நுனியிடைக்கட்டி அவள்
ஒட்டடை தட்டிடுவோம்

பூமியின் மையத்து நூதனம் முதல்
செவ்வாய் தாண்டிய சாதனம் வரை
நம் தமிழ் மொழியில்
பொறித்திடுவோம் வாரீர்....?

கருத்துகள் இல்லை: